Sunday, December 6, 2020

தோழரின் துப்பாக்கி ஏன் மவுனித்தது? சிறுகதை **************** “துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை”. தனக்கு மிகவும் பிடித்த குறள் இது…அந்த உலோகம்..அந்த உலோகத்தினால் செய்யப்பட்ட ஆயுதம் அடிக்கடி இப்படிப் பெருமைப்பட்டுக் கொள்ளும். நவீன காலத்தைச் சேர்ந்தவனாலும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கல்தோன்றி மண் தோன்றாத காலத்து முன்தோன்றிய மூத்த குடியாகிய தமிழ் கூறும் நல்லுலகம் தனது வருகையைப், பெருமையைப் முன்கூட்டியே பறை சாட்டி சென்று உள்ளது என்று அந்த ஆயுதம் அடிக்கடி பீற்றித் திரிந்துக் கொண்டு இருந்தது. “என்னடா ஏட்டிக்கு போட்டியா எக்குத்தப்பா அது உளறுகிறதே என்று யாரும் நினைக்கக் கூடாது…. ஏன்னா.. அந்த ஆயுதமே ஒரு ஏடாகூடமான ஆளுதான்” அதன் பெயர் துப்பாக்கி. ஒரு விதத்தில் துப்பாக்கியும் மழையைப் போன்றதுதான்! மா-நிலம் போற்றும் மாமழைக்கு நல்லவன், கெட்டவன் என்ற பாகுபாடுகள் கிடையாது. துப்பாக்கியும் அது மாதிரியான ஒன்று தான்!! விசையை அழுத்தினால் தனது எதிரில் யார் இருக்கின்றாரகள் என்று கவனிக்காமல், துப்பாக்கி குண்டுகளை மழையாய் பொழிந்து நல்லவனோ கெட்டவனோ அனைவரையும் போட்டு தள்ளிவிடும். எல்லாருக்கும் மோட்ச லோகத்தை அள்ளி அருளி தந்து விடும். எந்த தராதரமும் அற்ற இந்த துப்பாக்கியை விதவிதமான வகைகளாய் மேம்படுத்த, வளர்க்க மனிதர்கள் தங்கள் மூளைகளை கசக்கி பிழிந்து கோடான கோடி மூலதனத்தை, மனித உழைப்பை செலவழிப்பதை பார்த்தால் அந்த துப்பாக்கிக்கும் கூட தர்மசங்கடமாக இருக்கின்றது.ல் 303, ஏபிள், ஸ்டென் கன், எஸ்.எல்.ஆர்., ஏ.கே 47. .ஜி.கே.50…….. … .. என்ற நீளும் இந்த பட்டியல் உயர்நடுத்தர குடும்பத்தின் மளிகைச் சமான்களின் பட்டியலை காட்டிலும் நீண்டுக் கொண்டு போய்க் கொண்டு இருப்பதைக் காணலாம். இப்படியானத துப்பாக்கிகளின் ஒன்றுதான் தோழரின் துப்பாக்கி! அது ஒரு தான்னியங்கி யந்திர துப்பாக்கி. சரமாரியாக சில நொடிகளுக்குள் குண்டுகளைப் பொழிந்து பலரை சிவலோகப் பதவிக்கு அனுப்பி விடும் ‘தெய்வாம்சம்’ நிறைந்தது. எங்கேயோ பிறந்து, எப்படியோ வளர்ந்து, எங்கெல்லாமோ ஒளிந்து, எல்லாவற்றிலும் பதுங்கி, தரை, நீர், வான்… என்று அலைந்து திரிந்து கடைசியில் தோழரின் கைகளின் வந்து சேர்ந்தது. எந்த அரசானாலும், தனி மனிதனாலும் துப்பாக்கி வந்ததும் முதலில் செய்வது போட்டோவிற்கு போஸ் கொடுப்பதுதான்! துப்பாக்கியை கையில் ஏந்தியவுடன் கம்பீரமும், தைரியமும் மட்டுமல்ல… திமிரும், மற்றவர்களை பயமுறுத்த வேண்டும் மன வக்கிரமும் கூடவே ஒட்டி பிறந்து விடுகிறது. ஆனால், தோழர் அப்படி அல்ல! புரட்சி போரில்,. விடுதலைக்கான களத்தில் மக்கள் என்ன ஆயுதம் தரிப்பது என்பது எதிரி என்ன ஆயுதத்தை வைத்திருக்கிறான் என்பதை பொறுத்தது என்று தோழர் நம்பினார். தேடி தேடி பிடித்து அந்த ஆயுதத்தை தோழர் தொப்புள்கொடி உறவுகளிடம் இருந்து வாங்கினார். அன்றிலிருந்து தோழரும் அந்த துப்பாக்கியும் இணைபிரியாத நண்பர்களாகி விட்டனர். ஆனால் துப்பாக்கியுடன் ஒருமுறை கூட தோழர் புகைப்படம் எடுக்கவில்லை. தலைமறைவு வாழ்க்கையில் அது சாத்தியமில்லாமல் போய் விட்டது என்றாலும் அது மிகைப்படுத்தப்பட்ட மதிப்பீட்டிற்கும், வெகுமக்களிடம் இருந்து அந்நியமாவதிற்கும் காரணமாகிவிடும் என்பதாலும் ‘போட்டோவிற்கு போஸ் அளிக்க்கும் கலாச்சாரத்திற்கு’ தோழர் பலியாகவில்லை. ஒருநாள் தோழரும், அவரின் துப்பாக்கியும், மற்ற சகாக்களும் வங்கியை ஒன்றை சூழ்ந்தனர். மணி ஆக்சன் செய்ய தோழகள் திட்டமிட்டுள்ளதை அந்த துப்பாக்கியின் இரும்பு மண்டைக்கு புரிந்து விட்டது. பதபதப்பும், மகிழ்ச்சியும் அந்த துப்பாக்கியை வந்தது தொற்றிக் கொண்டது. இந்த மாதிரி அதிரடி வேலைகளில் அது தானே கதாநாயகன்! அதை முன்னிருந்தியே இந்த மணி ஆக்சன் திட்டமிடப்பட்டுள்ளது. துப்பாக்கிக் கண்டதும் பொது புத்தியில் உறைய வைக்கப்பட்டுள்ள பயம்..அச்சம்.. தான் இந்த அதிரடி திட்டத்தின் மூலதனங்கள். தோழர்கள் துப்பாக்கியை சரியாக பயன்படுத்துவர்களா? வங்கிக்குள் நுழைந்த சில நொடிகளில் தோழரின் உள்ளுணர்வு விழித்து ஏதோ ஒரு பொறி தட்டியது. இயல்புக்கு முரணாக சில நபர்கள் நடமாடினர்.. அங்கும் இங்கும் தென்பட்டனர். அவர்கள் வங்கியின் வாடிக்கையாளர்கள் இல்லை என்பது உறுதி. பல ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை கற்றுத் தந்த நுணுக்கங்கள், எச்சரிக்கை உணர்வுகள் தனது திட்டம் காட்டி கொடுக்கப்பட்டதை தோழர் உணர்ந்து கொண்டார். அங்கிருப்பது பெரும் பிழை என்று உணர்ந்த நொடிகளில் தோழர்களுடன் தப்பித்துச் செல்ல வெளியே பாய்கின்றார். “வங்கியை கொள்ளை அடிக்கிறாங்க ……. திருடங்க… திருடராங்க.. ஒடியாங்க” என்று கபடக் குரல்கள் ஒலித்தன. தோழர் திடுக்கிட்டார். பெரும் கும்பல் கூடி விட்டது. எப்படி நடந்தது இது? எங்கோ தவறு நேர்ந்து விட்டது? அந்த கறுப்பு ஆடு எது? சில வினாடிகளில் தோழரின் மனதில் எண்ணங்களும், உணர்ச்சிகளும் அலைகளாய் எழுந்து மோதின. திட்டம், செயல் புத்தி, அதை நடைமுறைப்படுத்துபவர் என்று ஒவ்வொரு நகர்வும் தொடர்ச்சியாக செழுமையாக இருந்தால் தான் இரகசிய அதிரடி திட்டங்கள் வெற்றி பெறும். எங்கேனும் ஒரு கண்ணி பிசிகினாலும், அறுந்தாலும் சிக்கல்கள் தலை விரித்தாடும்! துப்பாக்கிக்கு உற்சாகம் பீறிட்டு கிளம்பியது. இந்த கும்பல் குண்டு மழையில் தூசியாய் கரைந்து விடும். விசையை ஒருமுறை அழுத்தினால் போதும்…….. அது கூட தேவையில்லை. பளபளக்கும் அதைத் தூக்கி காட்டினால் போதுமானது. காக்கைகள் கூட்டமாய் கும்பல் சிதறி ஓடும்! தோழர் துப்பாக்கியை உயர்த்தி காணத்தை நோக்கி இரு முறைகள் சுட்டார், “ஒடி போயிடுங்க.. ……. நாங்க திருடங்க இல்ல.. புரட்சி காரங்க …… விடுதலை வீரர்கள்….. புரட்சி வெல்க” என்று முழங்கினார். கும்பல் கலைந்து ஒடவில்லை. துப்பாக்கியை கண்டும் பயப்படாமல் அந்த கும்பல் முன்னேறியது. ஆயிரம் டாலர் ஆச்சிரியத்திற்குரிய மர்மமும், சதியும் அதில் ஒளிந்திருந்தன. “புரட்ட்சி வாதிங்க இல்ல திருட்டு பசங்க” என்று கும்பலில் இருந்து குரல் எழுப்பி முதல் கல்லை வீசியது. தோழரின் உதடு கிழிந்து இரத்தம் பீறிட்டது. ,இந்த மாபெரும் சந்தாபத்திற்காக தான் அந்த துப்பாக்கி தவம் கிடந்தது. “நா யன் வேலையை காட்டப் போறேன் … நாலைந்து உயிராவது குடிக்கனும்..” என்று துப்பாக்கி மகிழ்ந்து கூத்தாடியது பெரும் மக்கள்திரள் மறியல்-ஆர்ப்பாட்டம் நடைபெறும் பொழுது காவல் துறையால் திட்டமிட்ட நடைமுறைப் படுத்தப்படும ஒரு செயல்தந்திரம் கல்லெறியும் தொழில் நுணுக்கம் ஆகும். எந்தந்த போராட்டடங்கள் எப்படி எப்படி கொண்டு சென்று முடிக்க வேண்டும் என்ற மூல யுத்திகள் ஆளும் கட்சிகளுக்கும் அதிகாரவர்க்கத்திற்கும் அத்துபடியான விசயம். குறிப்பாக உளவு போலிஸ்அதிகாரிகளுக்கும், துப்பாக்கிகளுக்கும் இது தலைகீழ் மனப்பாடம். அன்னா அசாரே ஆர்ப்பாட்டம், சாமியார்கள் மறியல், உழவர்கள் சாலைமறியல், மாணவர்கள் ஊர்வலம், கம்யூனிஸ்டுகள் தர்ணா, நக்சல்பாரி புரட்சியானர்கள் ஆர்பாட்டம்….. என்று எதை எதை எந்த போக்கில் கொண்டு செல்வது, அதன் இயல்பான முடிவிற்கு விடுவதா அல்லது இரத்த களறியில் முடிப்பதா என்பதை அந்த ஒரு கல்தான் தீர்மானிக்கும். அந்த ஒரு கல் நிகழ்கால் சமூகத்தின் ஒட்டு மொத்த பிரச்சனையை சுழித்து திசை திருப்பி விட்டு விடும். ஆளும் கட்சி காவல்துறை-துப்பாக்கி-ஒரு கல் கூட்டணிக்கு அந்த அளவிற்கு பலம் உள்ளது. “மறியலில் ஈடுபட்டவர்கள் கல்லெறிந்து கலவரம் போலிசாருக்கு பலத்த காயம் தற்காப்பிற்காக துப்பாக்கி சூடு நான்கு கலவரக்காரக்ள் சாவு “ என்ற செய்திகள் ஊடகங்களின் மூளையில் கல்வெட்டுகளாய் பொறிக்கப்பட்டு இருப்பவை வாந்தி எடுக்கப்படும். முதல் கல்லை எறிந்து கலவரத்தை தொடங்கியது யார் என்ற மர்மம் யாருக்கும் தெரியாது “சார்ர்ர்ஜ்….பய்யர்ர்.. “ என்று தனது இரும்பு உடலை சிலிர்த்து கொண்டு அந்த துப்பாக்கி தனக்குத்தானே ஆணை இட்டு மகிழ்ந்து பார்த்தது. தனது கடமையை செவ்வனே ஆற்றும் நேரம் நெருங்கிவிட்டதை அது உணர்ந்து இருந்தது. தோழர் இயந்திரத் துப்பாக்கியை இறுக்கிப் பிடித்தார். அதிலிருந்த குண்டுகள் சீறி பாயத் தயாராயின….ஒரு சில வினாடிகள்…. தாமதமாகின.. தோழர் சுற்றும் முற்றும் பார்க்கின்றார். வாரச் சந்தைக்கு வந்த அந்த எளியமக்கள் துடிதுடித்து சாவதா? யாருடைய சதிக்கு யாரை பலி ஆக்குவது? அவரின் பிடி சிறிது சிறிதாக சோர்ந்து தளர்ந்ததுக் கொண்டிருந்தது. அங்கிருந்து தப்பித்து ஒட தோழர்கள் முயற்சி செய்கின்றனர். சரமாரியாய் கருங்கற்களை கும்பல் ஏறிகின்றன. அவ்வளவு கருங்கற்கள் வங்கி எதிரில் எப்படி வந்தது? பலத்த காயங்களை அந்த கற்கள் உண்டாக்கின. தாக்குதல்களில் இருந்து தப்பிக்க தோழர்கள் குனிந்து உட்கார்ந்தனர். மண்டைகள் உடைந்து இரத்தம் கொட்டின. உடலெங்கும் இரத்தக் காயங்கள் சல்லடையாய்… “போதும் விடுங்க செத்துட போறாங்க..” என்றது பொதுசனம். “விடாத.. கொல்லுங்க” என்றன சதிகும்பல். “சுடு ….சுடு…” என்று இன்னொரு தோழர் அலறுகிறார். அப்பொழுதாவது தோழர் விசையை அழுத்துவார் என அந்த துப்பாக்கி எதிர்பார்த்தது…. ஏங்கியது…?! தோழர் மவுனமானார். அந்த துப்பாக்கிக்கு எரிச்சல் பற்றிக் கொண்டு வந்தது. “பைத்திகாரத்தனமாய் இருகாதீங்க தோழா….கல்லெறிந்து கொல்ல பார்க்கிறாங்க.. கையில துப்பாக்கிய வைச்சு கிட்டு எவனாவது கல்லால் அடிப்பட்ட சாவானா?” என்றது துப்பாக்கி. விரக்தியாய் தோழர் புன்னகையை தவழ விட்டார். ஆனாலும் அதில் ஒரு தெளிவும் இருந்தது. “தோழர் துப்பாக்கிய என்னான்ன்ட் கொடுங்க …நா சுடறேன்” என்று இரத்தம் உடலெங்கும் கொப்பளிக்க மற்றொருவர் மரணவலியில் கெஞ்சுகிறார். தோழர் மார்பில் துப்பாக்கியை இறுக பிணைத்துக் கொண்டு மண்டியிட்டு அமர்கிறார். “ஆயுதத்த… ஆயுதத்த… மவுனிக்கிறேன்” என்று தோழர் முணு முணுக்கிறார் “என்ன தோழர் செயல்றீங்க மவுனிக்றீங்களா?.. உங்கலால் எனது உயிர்ப்பும் அடங்கி போயிடும்.. சீக்கிரம் சுடுங்க” என்றது துப்பாக்கி. “மத்திய அரச மக்கள் பிரச்சனையில் கவனத்தை குவிக்கவே பாலத்தில குண்டு வைச்சோம்.. இரண்டு மணி நேரத்திற்கு முன்னே அதிகாரிக்கு பொது தொலைபேசி மூலம் தகவல் சொன்னோம் …. மீண்டும் கூட ஒரு மணி நேரம் கழித்து இன்னொரு அதிகாரிக்கும் குண்டு வெடிக்கப் போவதை சொன்னோம் அதிகாரிகள் அலட்சியம் மக்கள் பலர் உயிரை வாங்கிட்டது.. மக்கள் சாவுக்கு நாங்க காரணமாகிட்டோம் ………………………..மீண்டும் அப்பாவி மக்கள் சாவுக்கு நா காரணமாக மாட்டேன்..” விட்டு… விட்டு சொற்களை உதிர்த்தார் தோழர்..இரணத்தின் வலியில் மென்மையாய் பேசினாலும், அதன் வலிமை துப்பாக்கியிலிருந்து புறப்பட்ட குண்டின் விசையினும் அதிகமாய் இருந்தது. கற்களால் அடித்து.. அடித்து.. அந்த கும்பல் தோழர்களை கொன்றுக் கொண்டிருந்தது. கற்களை வீசிய கைகளில் சிலரின் கண்கள் குரூரமாய் நகைப்பதை தோழர் கண்டார். உயிர் வதையில் அணு அணுவாய் பரவும் நோவின் வலியில் தன்னையும் மீறிச் செயல்பட்டு மீண்டும் மக்கள் மீது துப்பாக்கியை பிரயோகித்து விடுவேமோ என்ற தார்மீக அச்சத்தில் அந்த மாவீரன் துப்பாக்கியை இன்னும் இறுக்கமாய் அணைத்துக் கொண்ட குப்புறச் சரிந்தார். தோழர்கள் சிந்திய இரத்தில் அந்த இடம் இரத்தக் குளமானது.. துடிதுடித்து அலறி.. அலறி.. முணகி… முணகி தோழர்கள் பலியானார்கள். எப்பொழுதும் மனிதர்களை இரத்த வெள்ளத்தில் மூடிகடிக்கும் துப்பாக்கி முதன் முறையாக இளஞ்சூடான தோழரின் இரத்தத்தில் சிறிது சிறிதாக நனைந்தது. பிரசவித்த தாயின் மார்பில் துயில் கொண்டுள்ள இரத்தமும் சதையுமான பச்சிளம் குழந்தையாய் அந்த ஆயுதம் அணைத்து கொள்ளப்பட்டு கிடந்தது. புதியதோர் ஆயுதாய் அந்த துப்பாக்கி உயிர்த்தெழுந்தது. தோழரின் இதயம் கடைசியாய் வேகவேகமாக துடித்துக் கொள்வதை அது கேட்டது. மெல்ல மெல்ல தேய்ந்து அந்த துடிப்புகள் அடங்கி கொண்டிருந்தன புரட்சியையும், இன விடுதலையையும் அதனினும் மேலாய் மக்களையும் நேசித்த அந்த தோழனின் ஆன்மா இறுதியாய் துடிக்கும் பொழுது துப்பாக்கியிடம் தனது இறுதி மரண சாசனமாய் ஏதையோ முணுமுணுத்தது. நூற்றாண்டாய் கம்யுனிச இயக்கம் செழுமைபடுத்தி வளர்த்துள்ள மானுட சாசனம் அது …. … ..?! “தன்நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்” பொய்யற்ற அந்த தோழனின் ஆன்மாவிலிருந்து சுயவிமர்சனப் பேராயுதம் குருதியில் வடித்து அந்த கொலைகருவியில் குடி புகுந்தது. அந்த உலோகம் மெல்ல உயிர்தெழுந்த்து. சுயபரீசலனையை செய்யத் தொடங்கியது!

Friday, November 20, 2020

சென்னை நீர் நிலைகலீண் வரைபடங்கள் -MADRAS WATER BODIES MAP FROM HISTORY உதவிய நன்றி நண்பர்களுக்கு

Add caption

 


















தொலைவில் இருந்து ஆயிரம் கோடிக்கணக்கில் பணம் செல்வு செய்து விவசாயிகளுக்கு செல்ல வேண்டிய நீரை மறுத்து உழவு தொழிலை பாழாக்கி விட்டு சென்னைக்கு குடிநீர்க்காக திட்டமிட்டு நீரை கொண்டுவர முடியும் என்றால்..
சிறிது திட்டமிட்டு..சில கோடிகள் செலவு செய்து.. மழை நீரை சென்னையை சுற்றியுள்ள ஏரிகளில் சீரமைத்து ஏன் சேமிக்க முடியாது..ஏன் மழை வெள்ளத்தை தடுக்க முடியாது..?dd caption
Add caption

Reshill
Photograph of a well at Madras, taken by Frederick Fiebig in c.1851. The well shown in this view was one of a number of traditional forms of water supply and irrigation necessary in a dry region such as Tamil Nadu. Other forms included tanks and canals. A municipal water supply was later created for the city between 1868-1872. Water was piped from a reservoir called the Red Hills Lake, which was fed from another reservoir known as the Cholavaram tank, in its turn filled by a channel from the Korttalaiyar river. Little seems to be known about Frederick Fiebig. He was probably born in Germany and became a lithographer (and possibly was also a piano teacher) in Calcutta, publishing a number of prints in the 1840s. In the late 1840s Fiebig turned to photography using the calotype process, producing prints that were often hand-coloured. His photographs includes several hundred views of Calcutta in the early 1850s, one of the earliest detailed studies of a city, a large hand coloured collection of which were bought by the East India Company in 1856, their first major acquisition of photographs. Among the roughly 500 pictures were views of Calcutta, Madras, Sri Lanka, Mauritius and Cape Town.Add caption


மலைப்பட்டு ஏரி...அடையாறு உற்பத்தியாகும் இடம்....

இப்படியான ஆராய்ச்சிகள் எல்லாம் நிறைய செய்யப்படுகின்றன..ஆனால்..எந்த படிப்பினையும் இல்லை..




Friday, June 12, 2020

புழல், கடலூர் சிறைகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவல். கொள்ளை நோயை தடுக்க தமிழக சிறைகளில் உள்ள நீண்ட நாள் நோயர்களான கைதிகளை, 60 வயது முதியோர் கைதிகள், பெண் கைதிகளை, அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரிக்கை

புழல், கடலூர் சிறைகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவல். கொள்ளை நோயை தடுக்க தமிழக சிறைகளில் உள்ள நீண்ட நாள் நோயர்களான கைதிகளை, 60 வயது முதியோர் கைதிகள், பெண் கைதிகளை, அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரிக்கை
                                                                 31-05-2020
                                                                      சென்னை


விடுநர் :
       முனைவர் சுப.மனோகரன்
       வழக்கறிஞர்
       பொது செயலாளர்
       சனநாயக உரிமை பாதுகாப்பு பேரவை
       Organization for Protection of Democratic Rights (OPDR)
       எண்:138, இரண்டாம் தளம்,
       தம்பி தெரு, பாரிமுனை,
       சென்னை -600 0001  செல்:9940176599
பெறுநர்
       அனைத்து ஊடகங்கள்
       ஊடக நண்பர்கள்

        
வணக்கம்
கொரோனா வைரஸ் தொற்றுநோய் உலகம் முழுவதும் அதிவேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 61 லட்சத்தை தாண்டியது. பலியானோரின் எண்ணிக்கை 3.70 லட்சமாக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,184ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 160ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
#புழல்_சிறையில் 30 கைதிகளுக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பாளையங்கோட்டை, கடலூர்,திருச்சி, உள்ளிட்ட சிறைகளில் இருந்து கைவினைப்பொருட்கள் பயிற்சிக்காக புழல் சிறைக்கு வந்து சென்ற 5 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து புழல் சிறையில் 19 சிறைக்காவலர்கள் 74 தண்டனை கைதிகள் உள்ளிட்ட 94 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 30 கைதிகளுக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சிறைக்கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அரசின் பொறுப்பு. அவ்வாறு உறுதி செய்ய முடியவில்லை எனில் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் அல்லது குறைந்தபட்ச விடுப்பில் அனுப்ப வேண்டும்.
4 முறை ஊரடங்குகள் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்பும் வைரஸ் நோய் தொற்று வேகமாக பரவுவதை அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்பட முடியவில்லை.. இந்த நிலையில் 5வது முறையாக ஊரடங்கு சட்டம் மோடி அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது
நோய் தொற்று வேகமாக பரவுவதை   தடுக்க அய்க்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம் தலைவர் மிகேல் பேக்லெட் அவர்கள் சிறை கைதிகளில்  வயதானவர்களை, நாள்ப்பட்ட நோய் வாய்ப்பட்டவர்களை விடுதலை செய்ய தனது உறுப்பு நாடுகளை கேட்டு உள்ளார். அதன்படி இரான், ஆப்கானிஸ்தான், இந்தோனேசியா உள்ளிட்ட பல நாடுகளில் கைதிகள் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். ஆப்பிரிக்காவின் சிறிய  நாடான மொராக்காவில் 5,654 கைதிகளை அவர்கள் வயது மூப்பு, உடல்நிலை, நீண்டகால சிறைவாழ்க்கை அடிப்படையில் சில நாட்களுக்கு முன் விடுதலை செய்துள்ளது 
அரசியல் கைதிகளை, மாறுபட்ட கருத்துகளுக்காக கைது செய்யப்பட்ட அரசிய கைதிகளை, மனித உரிமை ஆளுமைகளை, பத்திரிக்கையாளர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று அய்க்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைய செய்தி தொடர்பாளர் ரூபர் கோல்வில் வலியுறுத்தி உள்ளார்.

(U.N. human rights spokesman Rupert Colville said prisoners at high-risk of infection, such as the elderly, people with disabilities, and pregnant women who pose no risk to society should be immediately released. 

He told VOA people who are being held illegally should be released immediately.  They include political prisoners and those detained for critical, dissenting views, such as journalists and human rights defenders.  He said very few political prisoners are among the thousands that have been released in Iran.
  
“That is a big issue and obviously, these are not rapists, murderers, people guilty of serious crimes.  Indeed, under international law, many are not guilty of any crime at all.  So, we believe these should be absolutely among the first prioritized for release,” he said.) 
The Delhi government has issued a notification introducing a new provision of "Emergency Parole" of two months, in addition to regular parole available to convicts. Till now, as many as 409 prisoners have been released - 356 were given interim bail, while 63 came out on emergency parole.
A total of 204 prisoners have been released from various jails of the Union Territory between April 1 and 13. They include 45 prisoners arrested under the PSA, 78 undertrials through the undertrial review committee, nine undertrials falling under section 107, 109, 151 of the CrPC,” a senior government official told PTI.
Among the 204, 16 prisoners were released on parole, he said.
உலக நாடுகள் அனைத்திலும் வாழும் மனிதர்கள் இன்று பெரும் பேரிடர் நெருக்கடிக்குள் சிக்கி கொண்டு உள்ளனர். உலகின் சிறிய பகுதியில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் தொற்று நோய் மூன்று மாதங்களில் உலக சுகாதாரத்தில் பேரிடரை, பொருளாதார பேரழிவை உண்டாக்கி கொண்டு தொடர்ந்து பரவி வருகிறது. எந்த நாடும், எந்த மக்கள் குழுமும் இதிலிருந்து தப்பிக்க வாய்ப்பு இல்லை. உலக மாந்தர் வாழ்வின் அனைத்து தளங்களிலும் பேரிடரை, பேரழிவை கொரோனா வைரஸ் உருவாக்கும் என்பதாக உலகின் பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. 130 கோடி மக்கள் வாழும் இந்தியாவில் 'கொரானா வைரஸ்'  தொற்று நோய் பேரிடர் இன்னும் வேகமாக பரவும் என்று பல்வேறு ஆய்வுகள், புள்ளி விவரங்கள் எடுத்து கூறுகின்றது. இதை கணக்கில் கொண்டு இந்திய அரசும், உச்சநீதிமன்றம், தமிழக அரசும் கவனத்தில் கொண்டு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
உச்சநீதிமன்றம் சிறையில் உள்ள கைதிகளின் எண்ணிக்கையை குறைக்க தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும்படி ஆணை இட்டுள்ளது. நீதிமன்றங்கள் விடுமுறை விடப்பட்டு, வழக்குகள் ஒத்தி வைக்க ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன. நிலைமை மோசமாவதை உணர்ந்து மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசும், மாண்புமிகு பிரதமர் மோடியும் 5வது முறை ஊரடங்கு பிறப்பித்து, தற்பொழுது ஜீன் 30 ஆம்தேதி வரை நீடித்துள்ளார். தமிழக அரசும் தமிழகம் முழுவது 144 சட்டத்தை அமுல்படுத்தி இருக்கின்றன. பிரதமரின் ஊரடங்கை தமிழ்நாட்டிலும் அமுல்படுத்துப்பட்டு உள்ளது.
அனைத்து அரசு துறைகளும் இதில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. ஆனால், சிறைதுறை 'கொரானா வைரஸ்'  தொற்று நோய் பற்றி போதுமான அறிவியல் ரீதியான கவனம் மத்திய, மாநில அரசுகள் செலுத்தியதாக தெரியவில்லை. இதனால் தமிழக சிறைகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதாக ஊடங்கங்கள் கூறிகின்றன.
இந்த நிலையில் தமிழக சிறையில் உள்ள கைதிகள் பற்றி இந்திய அரசும், உச்சநீதிமன்றம், தமிழக அரசும் போதிய கவனமும், முன்னெச்சரிக்கையும் மனிதாமானமும் கொண்டு செயல்படுவது காலத்தின் அவசியம்.
இந்திய நீதித்துறை அறிக்கை 2019 யின் படி சிறையில் தங்கும் சிறைவாசிகளின் சராசரி எண்ணிக்கை 114 சதவீதமாக உள்ளது. சராசரியான எண்ணிக்கை இவ்வாறு இருப்பினும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் இது வெவ்வேறானதாக இருக்கிறது.
தமிழக சிறைகளில் 15,000 க்கும் மேல் சிறைகைதிகள் உள்ளனர்  இந்த கைதிகள் இந்திய நாட்டின் குடிமக்கள் ஆவார்கள். அவர்கள் உயிருக்கும் உடல் நலத்திற்கும் இந்திய அரசும், உச்சநீதிமன்றம், தமிழக அரசுமுமே முழுயான பொறுப்பாகும். இந்திய அரசியல் சட்ட அமைப்பு வழங்கியுள்ள உயிர்வாழ்வதற்க்கான உரிமை சிறைவாசிகளுக்கும் பொருந்தும்.
  15,000 க்கும் மேல் கும்பலாக சிறைகைதிகள் குறுகிய இடத்தில் அடைக்கப்பட்டு இருப்பது கவனத்தில் கொள்ள வேண்டும்  'கொரானா வைரஸ்'  தொற்று கும்பலாக இருக்கும் மக்கள் கூட்டத்தில் வேகமாக பரவக்கூடியது என்பதால் பெருமாலான மத்திய சிறைகளில் இப்படி கைதிகள் கும்பலாக அடைக்கப்பட்டு இருப்பது நோய் பரவலை அதிவேகமாக ஏற்படுத்து வாய்ப்பு அதிகம் உள்ளது. 
இரண்டாவதாக நீண்ட நாட்கள், காலங்கள் நோய்வாய்ப்பட்டோர்கள் குறிப்பாக ஆஸ்துமா, இருதய கோளாறு, சிறுநீரக கோளாறு, நீரழவு வியாதி போன்ற நோய்களை உடையர்களையும் (கைதிகளை) 60 வயதுக்கு மேற்ப்பட்ட முதியோர்களையும் (கைதிகளை) 'கொரானா வைரஸ்'  தொற்று நோய் எளிதில் தொற்றி மரணத்தை  ஏற்படுத்தும் என்பது உலக சுகாதார நிறுவனம் உட்பட பல அரசு ஆய்வுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.. பெருமளவு உலகம் முழுவதும் இப்படியான காரணங்களால் நடந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.  தனிகவனம் எடுத்து இவர்களை 'கொரானா வைரஸ்'  தொற்று நோயில் இருந்து பாதுகாப்பது அரசுகளால் இந்த பேரிடர் சூழ்நிலையில் முடியாதாகும்.
அரசியல் கைதிகளை. மாற்று கருத்துகளுக்காக கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய அய்க்கிய நாடுகள் மனித உரிமை ஆணையம் வலியுத்தி உள்ளது. நாடு முழுவதும் பெரும் அளவிலான அரசியல் சிறைவாசிகள் பல ஆண்டுகளாக விசாரணையின்றி அல்லது தண்டனை பெற்ற குற்றவாளிகளாக அடைக்கப்பட்டு கிடக்கின்றனர். பலர் நீதித்துறை விசாரணையின்றி 5 ஆண்டுகளுக்கு மேல் சிறைப்பட்டுள்ளனர். சிலர் ஏற்கனவே நோய்வாய்பட்டு அவதியுற்று வருகின்றனர்.
நாட்டிலுள்ள பல சிறைகளில் சரியான மருத்துவமனைகளோ, தேவைக்கேற்ற மருத்துவர்களோ, மருத்துவ சேவைக்கான வசதியோ இல்லை. அவசர சிகிச்சை தேவைப்படும்போது, வெளியில் உள்ள, ஏற்கனவே அதீத பணிச்சுமையால் திணறிக்கொண்டிருக்கும் பொது மருத்துவமனைகளையே நாட வேண்டியுள்ளது. பல நிர்வாக வழிமுறைகளின் காரணமாக ஏற்படும் தாமதத்தினால் பெரும்பாலான சிறைவாசிகள் தேவையான மருத்துவ வசதி கிடைக்கப் பெறாமல் உள்ளனர். தற்போதைய சூழலில் பொது மருத்துவமனைகளே காரோனா தொற்று நோயின் காரணமாக பெரிதும் நெருக்கடிக்குள்ளாகும் நிலையில் சிறைவாசிகளின் நிலைமை இன்னும் மேலும் மோசமானதாகி விடும். சிறைகளில் இதற்கு போதுமான வசதிகள் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என நமக்கு ஏதும் தெரியவில்லை.
 அதோடு இந்த கைதி நோயர்கள், முதிய கைதிகள் ( சீனியர் சிட்டிசன்) பல காரணங்களால் சிறைத்துறை அதிகாரிகள், சிறைக்காவலர்கள், சிறை வார்டன்கள் மிக நெருக்கமாக கண்காணிப்பில் இருக்கும் தேவை இருப்பதால் கைதிகளுக்கும், கைதிகளிடமிருந்து சிறை ஊழியர்களுக்கும் 'கொரானா வைரஸ்'  தொற்று எளிதில் பரவ வாய்ப்பு இருக்கின்றது
இதனால்தான் ' கொரானா வைரஸ்'  தொற்று பரவாமல் தடுக்க சிறையில் உள்ள கைதிகளை மொராக்கா, ஈரான், இங்கிலாந்து, அமெரிக்கா, மத்திய கிழக்கில் சில நாடுகள் விடுதலை செய்ததை நமது அரசாங்கங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
' கொரானா வைரஸ்'  தொற்று பரவாமல் தடுக்க புழல் சிறை வளாகத்தில் உள்ள பெண்கள் சிறப்பு சிறையில் இருந்து 36 மகளிரும், விசாரணை சிறையில் இருந்து 226 போ், பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்து 62 போ், வேலூா் மத்திய சிறையிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் உள்பட மொத்தம் 1,184 கைதிகள் விடுவிக்கப்பட்டதாக தமிழக  சிறைத்துறையினா் தெரிவித்தனா். இது வரவேற்க்க தகுந்தது. இன்னும் சிலர் விடுவிக்கப்பட உள்ளனர்.  எனினும் 15,000 கைதிகள் எண்ணிக்கையில் இது மிக, மிக குறைவாகும்.
' கொரானா வைரஸ்'   வயதானவர்களையும், நோய்வாய்பட்டவர்களைதான் பாதிக்கும் என்பதை குறிப்பாக கவனத்தில், கணக்கில் கொள்ளாமல் இந்த விடுதலை அமைந்துள்ளது… வயதானவர்களையும், நோய்வாய்பட்டவர்களைதான் ' காரோனா வைரஸ்'  தொற்று நோய் பரவாமல் தடுக்க முதலில் அவர்கள்தான் விடுதலை செய்து இருக்க வேண்டும். அவ்வாறக நடைபெறவில்லை. மேலும், ஊரடங்கு  சட்டம் அமுலில் இந்தியா முழுவதும் உள்ளதால் வயதான, நோய்வாய்பட்ட கைதிகள் விடுதலை செய்தால் இந்த கொரோனா பயம், தொற்று, பரவல், ஊரடங்கு கண்காணிப்புகளை மீறி தப்பித்து, தலைமறைவாக சென்று விடுவார்கள் என்பது இயற்கை நீதிகளுக்கு முரணானதாகும்.
மேலும் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ளோரை விடுதலை செய்யும் தமிழ்நாடு அரசு ஆணை 64/2018யின் படி  3 மாணவிகள் உயிருடன் எரிக்கப்பட்ட குற்றவழக்கில் மரணதண்டனை பெற்று  உச்சநீதிமன்றம் வரை உறுதி செய்யப்பட்டு கடைசியில் சீராய்வு மனுவில் ஆயுள்தண்டனையாக்க குறைக்கப்பட்ட அதிமுக கட்சியை சேர்ந்த  கைதிகள் அனைவரையும் மாண்புமிகு எடப்பாடியார் ஆட்சி ஒரே வாரத்தில் விடுதலை செய்தது. இதே ஆணையின்படி மேலவளைவு படுகொலை குற்றவழக்கில் ஆயுள்தண்டனை பெற்ற கைதிகள் இப்பொழுது விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். அதே போன்று 7 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ளோரை விடுதலை செய்யும் தமிழ்நாடு அரசு ஆணை 1155/2008 யின்படி இந்திய கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)  தலைவர் தோழர் லீலாவதி அவர்கள் படுகொலைசெய்யப்பட்ட  குற்றவழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளை 7 ஆண்டுகளில் திமுக ஆட்சியில் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் 10 ஆண்டுகள் சிறைதண்டனைக்கு பின்பும் 29 ஆண்டுகள் வரை பல கைதிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ' கொரானா வைரஸ'  தொற்று நோய் பரவும் பேரிடருடன் இணைத்து இவைகளையும் கருத்தில் கொண்டு கீழ்காணும் கோரிக்கைகளை ஆட்சியாளர்கள் மனிதாபிமானத்துடன் பரிசீலனை செய்ய வேண்டும். 
இந்த நொடி வரையில் உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 61 லட்சத்தை தாண்டியதையும் பலியானோரின் எண்ணிக்கை 3.70 லட்சமாக உயர்ந்துள்ளதையும் தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,184ஆக உயர்ந்துள்ளதையும். கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 160ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளதையும் கருத்தில் கொண்டு,
'கொரானா வைரஸ்'  பரவும் வேகத்தையும், அதனை உடனடியாக குணப்படுத்த எந்த மருந்தும் இல்லாமல் உள்ள இந்த சூழ்நிலையில், தமிழக மாண்புமிகு எடப்பாடி ஆட்சி,
1.   10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ளோரை விடுதலை செய்யும் தமிழ்நாடு அரசு ஆணை 64/2018 யின் படி  கைதிகள் தண்டனை பெற்ற குற்ற வழக்கு பின்னணிகள், மத வேறுபாடுகள் பார்க்காமல் அனைத்து கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும்.
2.   நீண்ட நாட்கள், காலங்கள் ஆஸ்துமா, இருதய கோளாறு சிறுநீரக கோளாறு, எயிட்ஸ், புற்றுநோய், தீராத புண்களுடன் கூடிய நீரழிவு வியாதி போன்ற நோய்களை உடைய கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்.
3.   60 வயதுக்கு மேற்ப்பட்ட முதியோர் கைதிகளை 'கொரானா வைரஸ்'  தொற்று நோயில்  இருந்து காக்க உடனை விடுதலை செய்ய வேண்டும்.
4.   20 ஆண்டுகள் மேல் 29 ஆண்டுகள் வரை தமிழக சிறைகளில் பல கைதிகள் உள்ளனர். இந்த கைதிகள் தண்டனை பெற்ற குற்ற வழக்கு பின்னணிகள், மதங்கள்-சாதி வேறுபாடுகள் பார்க்காமல் இந்த கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்.
5.   பெண் கைதிகள் பொதுவாக ஆணாதிக்க சமூகத்தின் எதிர்விளைவாகதான் குற்ற செயல்களுக்கு தள்ளப்பட்டு சிறை தண்டனை அனுபவிக்கின்றனர். இவர்களில் நீண்ட காலங்கள் ஆஸ்துமா, இருதய கோளாறு சிறுநீரக கோளாறு, எயிட்ஸ், புற்றுநோய், தீராத புண்களுடன் கூடிய நீரழிவு வியாதி போன்ற நோய்களை உடைய பெண் கைதிகளை, 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் தண்டனை அனுபவித்து முடித்து உள்ள பெண்கைதிகளை எந்த நிபந்தனை இன்றி விடுதலை செய்ய வேண்டும்.
6.       அரசியல் கைதிகளை, மாறுபட்ட கருத்துகளுக்காக கைது  செய்யப்பட்ட அரசியல் கைதிகளை, மனித உரிமை ஆளுமைகளை, பத்திரிக்கையாளர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று அய்க்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையம் வலியுறுத்திபடி மாண்புமிகு மோடி அரசும், எடப்பாடி அரசும் விடுதலை செய்ய வேண்டும்.
.  மனித குலம் இதுவரை சந்தித்திராத பெரும் பேரிடரை சந்தித்து வருகிறது. இயற்கை நீதியும், மனித மாண்புகளும் காக்கப்பட வேண்டியது காலத்தின் அவசியமாக உள்ளது.  இந்த கோரிக்கைகளை பரிவுடன் கவனித்து ஆவண செய்யும்படிக் கேட்டு கொள்கிறேன்.
நன்றி

                                             இவண்
                               முனைவர் சுப.மனோகரன்
 வழக்கறிஞர்
செல்: 9940176599
அனைத்திந்திய பொது செயலாளர்
                   சனநாயக உரிமை பாதுகாப்பு பேரவை
Organization for Protection of Democratic Rights (OPDR)

தொடர்புக்கு: முனைவர் சுப.மனோகரன், வழக்கறிஞர்
செல் 99401 76599