Saturday, October 4, 2014

செல்வி ஜெயலலலிதா மீதான தீர்ப்பு குறித்த பதிவுகளின் தொகுப்பு

செல்வி ஜெயலலலிதா மீதான தீர்ப்பு  குறித்த  பதிவுகளின் தொகுப்பு 




அன்று மக்கள் தீர்ப்பு இன்று நீதிமன்ற தண்டனை...
1996யில் தமிழகமக்கள் தண்டனை அள்ளித்தார்கள். அதிமுகாவை 1996யில் நாடாளுமன்றத் தேர்தலில் 39 தொகுதிகளிலும் மக்கள் தோற்கடித்னர். சட்டமன்றத் தேர்தலில் வெறும் 4 தொகுதிகளில் மட்டும்தான் அதிமுக வெற்றி பெற்றது . அன்று மக்கள் தேர்தலில் கொடுத்த தண்டனை தீர்ப்பை, இன்றைக்கு நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை வழி மொழிந்துள்ளது.. அதுவும் 18 ஆண்டுகள் தங்கள் அதிகார, பண, சாதிய பலத்தால் வழக்கை இழுத்தடித்து. இந்தியாவில் உள்ள நீதிமன்றங்கள் புனிதமானவைகள் அல்ல. அவை ஏழைக்கும் பணக்காரனுக்கு, அதிகாரத்தில்-பதவியில் இருப்பவனுக்கும் சதாரண மக்களுக்கும், ஆதிக்க சாதிகாரனுக்கும் ஒடுக்கப்பட்ட சாதிகாரனுக்கும் வேறு வேறு நீதிகளையே வழங்கி வருகின்றன. ஆகவே அரிதினும் அரிதாக நீதிமன்றங்கள் வழங்கும் நல்ல தீர்ப்புகளை நாம் வரவேற்க வேண்டும்.



எல்லாவற்றுக்கும், எல்லா நிகழ்விற்க்கும் பின் அரசியல் இருக்கவே செய்யும் என்பதுதான் அரசியலின் பால பாடம். ஒரு நிகழ்விற்க்குப் பின் “அரசியல்” இருக்காது” என்று மாற்று அரசியல் இயக்கங்கள், கருத்தாளர்கள் யோசிக்க இயலாது.... இன்று இந்துத்துவா பாசிசம், ஊழல், கார்ப்பரேட் முதலாளிய கொள்ளை, இயற்கை வளங்களை சூறையாடல்…போன்ற பல பிரச்சனைகள் நமது மக்கள் முன் உள்ளன.
இவை ஒவ்வொன்றும் அதனதன் அளவில் மிகவும் மக்கள் நோக்கில் முக்கியமானது. இவைகளை மாற்று அரசியல் இயக்கங்கள், கருத்தாளர்கள் எப்படி கையாள்கிறார்கள் அல்லது இதில் எப்படி அரசியல் செயல்பாடுகளை கொண்டுள்ளனர் என்பதுதான் அவர்கள் வளர்ச்சியை தீர்மானிக்கின்றன.
ஜெயலலிதா தண்டனைக்கு பிறகு தமிழக அரசியலில் ஏற்படும் வெற்றிடத்தை பிஜேபி கைப்பற்ற வாய்ப்பு இருப்பதால் நாம் மகிழ்ச்சி கொள்ள முடியாது என்ற கருத்துக்கள் முன் வைக்கப்படுகின்றன. இப்படியானதொரு வாய்ப்பு, முனைப்புகள் இருக்கவே செய்கின்றன.
ஆனால் திமுக, அதிமுக கட்சிகள் ஊழலை, கொள்ளையை, அதிகார அத்துமீறலை சமூகத்தின் அடிமட்ட வேர்கால்கள் வரை கொண்டு சென்றுள்ளன. ஒரு வார்டு மெம்பர் ஒரு பதவி காலத்தில் பல கோடிகளுக்கு மக்கள் பணத்தை கொள்ளை அடித்துள்ளான். அரசியல் என்பது பணம்கொழுக்கும் தொழிலாக திமுக, அதிமுக கட்சிகள் மாற்றி உள்ளன. இது மாற்று அரசியல் தோழர்களை பிழைக்கத்தெரியாதவர்கள், விளங்காதவர்கள் ..போன்ற அடைமொழிகளுக்கு அழைக்க மக்களை திமுக, அதிமுக கட்சிகள் பழக்கி உள்ளன.
ஆகவே ஊழலுக்கு எதிரான் இந்த தீர்ப்பை நாம் கொண்டாட வேண்டும்… மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும்.

வெற்றிடம் பற்றி: 
கடந்த 30 ஆண்டுகளாக ஈழ ஆதரவு அரசியலில் நேர்மையாக உழைப்பவர்கள் கம்யுனிச புரட்சிகர அமைப்புகளும், தமிழ் தேசிய அமைப்புகளும், பெரியாரிய அமைப்புகளும், தலித் இயக்கங்களும், சில இஸ்லாமிய அமைப்புகளும்தான். ஆனால் இந்த உழைப்பை அறுவடை செய்பவர்களாக, ஈழ அரசியலில் ஆதாயம் பெற்றவர்கள் திமுக, அதிமுக கட்சிகள் தான் இன்றுவரை உள்ளன. திமுக, அதிமுக கட்சிகள் ஆதாயம் அடைகின்றன என்பதற்க்காக கம்யுனிச புரட்சிகர அமைப்புகளும், தமிழ் தேசிய அமைப்புகளும், பெரியாரிய அமைப்புகளும், தலித் இயக்கங்களும், சில இஸ்லாமிய அமைப்புகளும் அதில் களமாடுவதை குறைத்து கொள்ள முடியுமா என்ன?
கடந்த 40 ஆண்டுகளுக்கு காங்கிரசும், தற்பொழுது பாரதீய சனதாவும் தமிழக அரசியலில் செல்வாக்கு பெற முயன்று தோற்று போய்விட்டன. ஆனால் காங்கிரசும், பாரதீய சனதாவின் அரசியலை திமுக, அதிமுக கட்சிகள் தமிழக மக்களிடன் கொண்டு சேர்க்க்கும் பணிகளை சிறப்பாக செய்து வருகின்றன. பாரதீய சனதா இங்கு காலூன்ற யார் காரணம்? திமுக, அதிமுக கட்சிகளின் பதவி வெறி, ஊழல், அதிகார அத்துமீறல்தான். திமுக, அதிமுக கட்சிகள் காங்கிரசும், பாரதீய சனதாவின் கொள்கைகளைத்தான் இங்கு நடைமுறைப்படுத்துகின்றன. இங்கு எழுந்த மக்கள்திரள் போராட்டங்களை யார் ஒடுக்கினார்கள்.? கூடங்குளம் மக்கள் போராட்டத்தின் எதிரிகள் யார்..? காங்கிரசும், பாரதீய சனதா, திமுக, அதிமுக கட்சிகள்தான்.. கம்யுனிச புரட்சிகர அமைப்புகள், தமிழ் தேசிய அமைப்புகள், பெரியாரிய அமைப்புகள், தலித் இயக்கங்கள், இஸ்லாமிய அமைப்புகள் மீதான ஒடுக்குமுறைக்களுக்கு காங்கிரசும், பாரதீய சனதா, திமுக, அதிமுக கட்சிகளும்தான் காரணம். ஒடுக்குமுறையின் அளவுகோலில் இவைகளுக்கு வித்தியாசங்கள் உள்ளன என்பது உண்மையாக இருப்பினும் இன்று அந்த இடைவெளி சிறிது சிறிதாக குறைந்து வருகின்றன.

இந்த வெற்றிடத்தை நிரப்ப வேண்டிய கடமை கம்யுனிச புரட்சிகர அமைப்புகள், தமிழ் தேசிய அமைப்புகள், பெரியாரிய அமைப்புகள், தலித் இயக்கங்கள், இஸ்லாமிய அமைப்புகள் மீது காலம் சுமத்தி உள்ளது. இந்த முரண்பாடுகளை நுண்ணறிவுடன் அரசியலாக்க வேண்டியது இந்த மாற்று அரசியல் இயக்கங்கள், கருத்தாளர்கள் முன் உள்ள சவால். இதை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்…
இந்துத்துவா பாசிசம், ஊழல், கார்ப்பரேட் முதலாளிய கொள்ளை, இயற்கை வளங்களை சூறையாடல்…போன்ற பல பிரச்சனைகளை, இதனால் எழும் அரசியல் முரண்பாடுகளை கைகொள்ள தயாராக வேண்டும்..
இதுதான் அரசியல்..,…இல்லையெனில்..பாசிசம் வரும்..மக்கள் பிரச்சனைகளை, மக்களிடமான அதிருப்திகளை பயன்படுத்தி..@


கிரிமினல் குற்றங்களை விட சிவில்( சொத்து) குற்றங்களுக்கு அதிகம் தண்டனை விதிக்கப்பட வேண்டும். ஆனால் நம் நாட்டில் சிவில்( சொத்து) குற்றங்களுக்கு மிகக் குறைவான தண்டனையே வழங்கப்படுகிறது. பலசமயங்களில் சிவில்( சொத்து) குற்றங்களை செய்தவர்கள் சட்டங்களில் உள்ள ஓட்டையை, கையூட்டு கொடுத்து தப்பி விடுகின்றனர். கிரிமினல் குற்றங்கள் தனிநபருக்கோ அல்லது அவர் சார்ந்த சிலருக்கோதான் தீமையாக இருக்கிறது. சிவில்( சொத்து) குற்றங்கள் பெரும்தொகையான மக்களுக்கு எதிரானது..தீமை விளைக்கின்றது. 66 கோடிகள்... 1,76,000 கோடிகள் எத்தனை தமிழக மக்களின் வாழ்க்கைக்கு செலவிட வேண்டியது.. அவர்கள் வாழ்க்கை சீரழித்து சின்னபின்னமாகி நரகத்திற்கு போனது இந்த சிவில்( சொத்து) குற்றங்களால்தான்..சென்னை ஜகோர்ட வழக்கறிஞர் சங்கம் கலைத்துவிட்டு இனிமெல்......................... கொள்ளைகாரர்கள்- குற்றவாளிகள் ஆதரவு ஜகோர்ட வழக்கறிஞர் சங்கம் என்று பெயர் மாற்றம் செய்யப் படுகிறது@

இந்த ஜனநாயகம் என்ற அமைப்பு முறை மக்களுக்கு அளிக்கும் வாய்பே அவ்வளவு தான். தேர்தல் என்பது எரியும் கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி என்ற வாய்ப்பையே நமக்கு அளிக்கிறது. இன்னும் தேர்தல் ஜனாயகத்தின் உடன் பிறப்பே ஊழல். ..@

தினந்தந்தி டிவி பாண்டே வன்முறைக்கு எதிராக பொங்கி பொங்கி எழுவாரே.. !!ஒடுங்க வேண்டுமென்று நரம்பு புடைக்க காத்துவானே,..! ஏன் இப்படி இன்று சோக கீதம் வாசிக்கிறான்.. பாண்டே மூச்சியை பார்க்க சகிக்கல.. ஆள மாத்து..

குற்றவாளி ஜெயாவிற்க்கு ஆதரவாக வன்முறை, தீவைப்பு, பொதுசொத்தை நாசப்படுத்தும் அதிமுக கட்சி குண்டர்கள் மீது தமிழக காவல்துறை ஜெயா அரசு கொண்டுவந்த புதியதாக கொண்டு வந்த குண்டர்சட்டத்தை (அதாவது ஒரு முறை குற்றம் செய்தால்) போட்டு சிறையில் சட்டம்-ஒழுங்கை காப்பாற்ற அம்மாவின் சார்பி. வேண்டி கேட்டு கொள்கிறோம்..

நந்தினி ஆனந்தன் கடந்த 25 ஆண்டுகளில் தி.மு.க.,அ.தி.மு.க. ஆட்சிகளில் நடைபெற்ற அனைத்து ஊழல்களும் நேர்மையான முறையில் விசாரணை செய்யப்பட்டு கருணாநிதி குடும்பம்,மன்னார்குடி கும்பல், இரு கட்சிகளின் இன்னாள் முன்னாள் அமைச்சர்கள்,ஊழல் அதிகாரிகள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட வேண்டும்.அனைவரது சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட வேண்டும்.இதன் மூலம் கிடைக்கும் பலஆயிரம் கோடி நிதியின் மூலம் தமிழ்நாட்டில் வேலையில்லாத அனைத்து இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்புகளை வழங்கும் திட்டங்களை செயல்படுத்தவேண்டும்


அண்ணன் பண்ருட்டி வேல்முருகன் ஜெயா டிவியில் குற்றவாளி 7402 -க்கு ஆதரவாக முழங்கி கொண்டிருக்கிறார்..!

விளங்கிடும் தமிழ்நாடு வாழ்வுரிமை...!!

ராம்செத் மாலின் வழக்கறிஞர் போன்றவர்கள் வழக்கறிஞர் தொழிலுக்கு களங்கம்...பணம் கொடுத்தால் எந்த சட்டத்தையும் வளைப்பார்..

என்னுடைய அப்பா எனக்கு 5 வயது இருக்கும் பொழுது ஒரு சாலை விபத்தில் மரணம் அடைந்து விட்டார். அதற்கு பிறகு எனது அம்மா தான் எங்களை வளர்த்தார். அம்மாவின் அயராத உழைப்பு, உடல் நலம்( கர்ப்பப்பை கோளாறு) அவரை எனது பள்ளி இறுதி நேரத்தில் பலி கொண்டு விட்டது.. எனக்கு வயது 55 ஆண்டுகள் நிறைவு ஆகிறது...தாய்க்கு தலைமகனான என்னிடம் எனது அம்மா எப்பொழுதும் ஒரு வார்த்தை எனக்காக அடிக்கடிச் சொல்வார்..அந்த வார்த்தை எனக்கு மட்டும் அல்ல...!!
" எதற்க்காகவும் யார் காலிலும் விழக் கூடாது. ..சுயமரியாதை உயிரினும் மேலானது "@

கண்ணீர் அமைச்சரவையின் முதல் சட்டம்: இன்று முதல் தமிழர்களின் சொத்துக்களை ஊழல் செய்து, கொள்ளை அடிப்பது குற்றமல்ல ...@

அதிமுக அடிமை ஒருவன் சிறைவாயிலில் கிடந்த தமிழக மந்திரிகளுக்கு தண்ணீர் கூட கன்னடர்கள் தரவில்லை என்று தங்கள் சுயநலத்திற்கு பொய்களை கட்டவிழ்த்து விடுகிறான்... ஆனால் வேறொரு செய்தியாளரின் பதிவு இது.. //எந்தச் செய்தியையும் உறுதிப்படுத்த முடியாத நிலையில், சோர்ந்துபோய் சந்து முக்கில் உட்கார்ந்திருந்தோம். அப்போது அதை ஒட்டி இருந்த வீட்டைச் சேர்ந்த பெண்மணி, "ஏய் எல்லாம் வாங்கப்பா.. சோறு ரெடி.. பாசிப் பருப்பு சாம்பார்தான் வச்சிருக்கேன். கொற சொல்லாம சாப்பிடனும்" என்றார்.
நாக்கைச் சப்புக்கொட்டிக்கொண்டு, அரை மனதோடு "பரவாயில்லங்க" என்று மறுத்தோம். அவர் பிடிவாதமாக தட்டைக் கையில் கொடுத்து சுடச்சுட சோறும் சாம்பாரும் ஊற்றினார்.
அடித்த வெயிலுக்கும் அப்போதிருந்த பசிக்கும் அந்த உணவு எப்படியிருக்கும் என்று சொல்லத் தேவையில்லை. பணம் கொடுக்க முன்வந்தபோது வாங்க மறுத்துவிட்டார்.
முதல் பந்தியில் இடத்தை மிஸ் பண்ணிவிட்ட முத்து கிருஷ்ணனுக்கு சுடுசோறும் ரசமும் கிடைத்தது.
பிறகு, சிறிது நேரம் கழித்து சூடாக டீ போட்டுக் கொடுத்தார்.
எனக்கு சுமார் 25 வருடங்களுக்கு முன்பாக விகடனில் படித்த, "ஏனு சாமி உடுத்தீரோ?" (என்ன ஐயா தேடுகிறீர்கள்?) என்ற கன்னடப் பின்னணியில் அமைந்த கதைதான் ஞாபகத்திற்கு வந்தது. புதிதாக ஒரு ஊருக்குச் செல்லும் ஒருவரிடம் மிக இயல்பாகப் பழகும் கன்னட தேசத்தவருடனான உரையாடல்தான் அந்தக் கதை.//@#

அதிமுக கட்சி அடிமைகளுக்கு மட்டும்..
“தன் தலைவரிடம் எல்லையற்ற அன்பையும் மரியாதையையும் கொண்டிருப்பது இயல்பான ஒன்றெனக் கருதலாம். ஆனால் தலைவரின் கட்டளைக் குக் கண்மூடித்தனமாகக் கட்டுப்பட்டுச் செயல்படுவது என்பது வேறு. இரண்டாவது நிலையால் கேடான விளைவுகள் உண்டாகும். உயர்வான எதையும் மதிப்பது நல்ல பண்பாகும். அத்தன்மையில் உயர்ந்த கொள்கைகளையும் பண்பையும் கொண்டுள்ள மனி தனை மதிப்பது தேவையானதுதான். அதற்காக அவரி டம் கண்மூடித்தனமான விசுவாசியாக இருக்கக்கூடாது. தன் சுயமரியாதையை இழந்து தலைவரை வழி படுவது என்பது தன்னையே இழிவுபடுத்திக் கொள்வ தாகும். தலைவரை மதிப்பது என்பது தன் சுய அறிவு டன் சுதந்தரமாகச் செயல்படும் உரிமையை இழக்காத ஒன்றாக இருத்தல் வேண்டும். கண்மூடித்தனமாக வழிபடுதல் என்பது ஒருவனை முழு முட்டாளாக - அடிமையாக ஆக்கிவிடும்.”

பாபாசாகேப் அம்பேத்கர்@

கொள்ளை அடிப்பது, ஊழல் செயவது சரியானதொரு வழிமுறை என்று சதாரண மக்கள் வரை பரப்பி விடுவார்கள் போல..ஊழலை ஒழிப்பது இந்த அமைப்பு முறையை மாற்றியமைப்பதோடு தொடர்புடையதுதான்..ஆனால் ஊழலுக்கு எதிரான கருத்தாக்கங்களை, நடைமுறைகளை தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டும்... சிறிய அசைவுகளையும் ஆதரிக்க வேண்டும்@

தமிழ்நாட்டில் சிறையில் உள்ள குற்றவாளிகளின் உறவினர்கள், நண்பர்கள் இனிமேல் உச்சநீதிமன்ற தீர்ப்பு அப்பீல் பண்ணி தீர்ப்பு வரும் வரை கீழமை நீதிமன்றங்கள் கொடுத்த தண்டனைகளை தண்டனைகள் என்று சொல்லக்கூடாது என்று நீதிமன்றங்கள், காவல்நிலைய வாயில்களில் உண்ணாவிரதங்கள் இருக்க தமிழக காவல்துறை அனுமதி வழங்குமா..?@

//படிப்பறிவற்ற, ஆர்வக்கோளாறு தொண்டர்கள் அன்புமிகுதியில் ஆர்ப்பாட்டம் செய்வதை கூட பொறுத்துக் கொள்ளலாம். படித்த அரசியல்வாதிகள், ஊடகங்கள், சினிமாக்காரர்கள் செய்யும் அலப்பரைகள் தமிழர்களை உலகளவில் கோமாளிகளாக சித்தரித்துக் கொண்டிருக்கிறது.//

சில தனி நபர்கள்..கூட கொள்ளைக்கு,ஊழலுக்கு ஆதரவாக இந்த சமூகத்தில்...இருக்கலாம்.. ஆனால் ஒரு மிகபெரும் நிறுவனம்.. அனைத்து கலைகளும் ஒருங்கிணைக்கப்பட்ட சினிமா துறையினர்... நிறுவனமாக... கொள்ளைக்கு,ஊழலுக்கு ஆதரவாக தெருவிற்கு வருவதை எப்படி புரிந்து கொள்வது...?
படைப்பாளிகளின் அறம், தார்மீகம், பற்றி வாய் கிழிய பேசும் கலை-இலக்கிய-எழுத்தாள ஜம்பவான்கள் ஏன் அமுக்கி வாசிக்கினர்...

தமிழ்நாட்டின் மிகப் பெரிய சாபக்கேடு சினிமாக்காரர்கள்தான்.. சரியா..?@

ஜெயலலிதா கைதியாக அடைக்கப்பட்டுள்ள இந்த பரப்பன அக்ரஹாரம் சிறையில் கேரளாவின் அரசியல் தலைவர் மதானி அவர்கள் எல்லாவிதமான மனித உரிமைகளையும் மீறி பல ஆண்டுகளாக ஜாமீன் மறுக்கப்பட்டு விசாரணை சிறைவைக்கப்பட்டு உள்ளார்..
ஜெயலலிதா- கருணாநிதி ஆட்சிகளில் மாற்று அரசியல் களமாடும் தோழர்களின் கைதுகள் வார கடைசி வேலைநாளான வெள்ளிக்கிழமைகளில்தான் தமிழக காவல்துறை கைது செய்துள்ளது.
தனக்கு வந்தா மனித உரிமை மீறல்..மற்றவர்களுக்கு வந்தால்..?@

தமிழ்நாட்டில் நிலவும் பார்ப்பனீயம் விஷேசமானது. எந்த இயக்கம் தோன்றி வளர்வதற்கு அடிப்படையானதொரு சமூக அமைப்பு தேவை என்பது சமூகவியலில் அடிப்படை பாலபாடம். அதனால்தான் பலமான பார்ப்பனீய எதிர்ப்பு இயக்கம் பெரியாரால் தமிழ்நாட்டில் கட்டி அமைக்கப்பட்டது. ..சோ..சு.சாமி, தினமணி.. THE HINDU...இன்றும் வர்ணாசர்ம நீதியை நிலைநாட்ட மக்களை திரட்ட மக்களிடம் நச்சை பரப்ப முயல்கின்றன . பெரியாரின் பார்ப்பனீய எதிர்ப்பு இயக்கத்தை நீர்த்து போகச் செய்து விட்டனர். பார்ப்பனீய கருத்தாக்க தலைமையை தமிழ்க மக்களை ஏற்க்ச் செய்வதில் வெற்றியும் பெற்று விட்டனர். அதை நோக்கி தமிழக மக்களை, இயக்கங்களை நகர்த்த திட்டமிடுகின்றனர். தமிழ்நாட்டில் நிலவும் பார்ப்பனீயத்தின் கருத்தியல் விஷேசமானது என்பதால்தான் இவ்வளவு எதிர்ப்புக்கு பிறகும் கூட சிறிதுகூட சுயவிமர்சனம் அற்றதாக மிகபெரும்பாலான பார்ப்பனர் கும்பல் உள்ளது அதனால் இன்னும் அறிவியல்வகைப்பட்ட பலமான பார்ப்பனீய ஒழிப்பு இயக்கம் தேவை@

படுகையும் பாலாறும் ஆகும். விக்கி மீடியா ஆங்கிலத்தில் பெருகற்கால காலம் ( Monolithic period ) என்று கிளிக் செய்தால் பாலாற்று படுகையில் உள்ள பல இடங்களை காட்டும்..அந்த தொன்மையாக நாகரிகத்திற்கு காரணமான பாலாற்றை ஜெயலலிதா- கருணாநிதி அரசாங்கங்கள் என்ன செய்துள்ளன. அவர்களின் அல்லகைகள் தங்கள் சுயநலத்திற்க்காக பாலாற்றை அழித்து விட்டனர். இந்த ஒரு காரணம் மட்டும் போதும் ஜெயலலிதா- கருணாநிதியுன் இந்த குற்றத்திற்க்காகவே தண்டிக்கப்பட வேண்டிய குற்ற வாளிகள் !! வடதமிழ்நாட்டை அழித்தவர்கள் ஜெயலலிதா- கருணாநிதி அரசாங்கள்!!@

அரிதினும் அரிதாக நீதிமன்றங்கள் வழங்கும் நல்ல தீர்ப்புகளை மக்கள் வரவேற்கவே செய்கின்றனர் .... 
//குற்றத்தின் தீவிரத்தன்மை, சொத்துகளின் அளவு, அவை குவிக்கப்பட்ட முறை ஆகியவற்றின் அடிப்படையில்தான் தண்டனையின் அளவை தீர்மானிக்க முடியும். அப்படி பார்க்கும்போது, இது கடுமையான தண்டனை விதிக்கத்தக்கது. எனவே, இவர்களுக்கு அதிகபட்ச தண்டனையில் (7 ஆண்டு), பாதிக்கு மேல் விதித்தால்தான், நீதி நிலைநாட்டப்படும்.//
ஜெயலலிதாவுக்குத் தண்டனை என்ன ?
துல்லியமான புதிய தகவல்
=========================================
1. ஊழல் தடுப்புச் சட்டத்தின் குறிப்பிட்ட இரண்டு விதிகளின் கீழ் 4 ஆண்டு சாதாரணச் சிறைத் தண்டனை ( simple imprisonment அதாவது சிறையில் வேலை செய்வது கட்டாயமில்லை. )
2. மேலும் மற்ற சட்டப் பிரிவுகள் சிலவற்றின் கீழ் 6 மாதச் சாதாரணச் சிறைத் தண்டனை.
3. மேற்கண்ட இரண்டு தண்டனைகளையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும். அதாவது மொத்தம் 4 ஆண்டுகள்.
4. இவை அல்லாது 100 கோடி ரூபாய் அபராதம் கட்ட வேண்டும். கட்டத் தவறினால் மேலும் 6 மாதம் சிறைத் தண்டனை . இது மேற்கண்ட 4 ஆண்டுத் தண்டனைக்குள் அடங்காது.
5. அபராதத் தொகையை அரசு வசூல் செய்ய, ஜெயலலிதாவின் வங்கிக் கணக்குகளில் உள்ள ஃபிக்செட் டெப்பாசிட், பாலன்ஸ் தொகை போன்றவை முதலில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.
6. மீதி உள்ள தொகையை வசூல் செய்யும் முறை : 
கோர்ட் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ள அவரது தங்க, வைர நகைகளில் 7 கிலோ 40 கிராம் அளவுக்குத் தங்கத்தையும், அதே விகிதாசாரத்தில் வைரத்தையும் தனியாக எடுத்து வைத்துவிட வேண்டும்.
பிறகு உள்ள நகைகளில் போதுமானவற்றைத் தனியாக எடுத்து ரிசர்வ் வங்கிக்கோ அல்லது ஸ்டேட் வங்கிக்கோ அல்லது பொது ஏலம் மூலமோ விற்பனை செய்து வசூல் செய்ய வேண்டும்.
அதன் பிறகும் மீதம் உள்ள நகைகளை அரசே பறிமுதல் செய்து எடுத்து கொள்ள வேண்டும்.
7. ஏற்கனவே அட்டாச் செய்யப்பட்டுள்ள லெக்ஸ் உள்ளிட்ட 6 கம்பெனிகளின் அசையாச் சொத்துகள் அனைத்தையும் அரசு பறிமுதல் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.Jawahar

No comments:

Post a Comment